ஆப்நகரம்

அமைச்சர் மெய்யநாதன் உடல்நிலை எப்படி இருக்கிறது?

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 1 Oct 2022, 11:22 am
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் ரத்த அழுத்த காரணமாக திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
Samayam Tamil meyyanathan


தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன். இவர் நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். குளிரூட்டப்பட்ட முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் அருகே வந்தபோது ரத்த அழுத்த காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது

அமைச்சருக்கு திடீரென உடல் வியர்த்ததால் தன்னுடைய உதவியாளரிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு அமைச்சருக்கு உடல் நலம் சரியில்லாதது குறித்து தெரிவித்தார். இதையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது.
ஓபிஎஸ்ஸின் அடுத்த திட்டம்: வைத்திலிங்கம் கொடுத்த நம்பிக்கை - சசிகலா தான் வேற யாரு?
அப்போது சிதம்பரம் ரயில்வே போலீசார் அமைச்சர் மெய்யநாதனை ரயிலில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சக்திகணேசன் மருத்துவமனைக்கு வந்து அமைச்சரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
டாஸ்மாக் பார் டெண்டர்: ரத்து செய்த உயர் நீதிமன்றம்!
அமைச்சரின் குடும்பத்தினர் சிதம்பரம் மருத்துவமனைக்கு வந்த நிலையில் தற்போது அவர் பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

அடுத்த செய்தி