ஆப்நகரம்

தமிழகத்தில் லாரிகள் ஸ்டிரைக்; திடீர் திருப்பம் - பொதுமக்கள் ஹேப்பி!

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 5:33 pm
தமிழ்நாட்டில் இயங்கி வரும் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, டிஜிட்டல் ஸ்டிக்கர் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து தான் வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்தது. மேலும் டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு ஆகியவற்றை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசு தரப்பில் இருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Samayam Tamil Lorry Strike


எனவே மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தது. இதன்மூலம் நாளொன்றுக்கு 7 ஆயிரம் லாரிகள் ஓடாது. சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடையும். 20 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட நேரிடும்.

அம்மா மினி கிளினிக்; வெடிக்கும் புதிய சர்ச்சை - யாருக்கு லாபம்?
அதேசமயம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக சரக்கு முன்பதிவு வரும் 26ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தமிழக லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் தெரிவித்தது.

ஆனால் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்தது. அதாவது, தற்போதைய சூழலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் பண்டிகை வருகிறது. இந்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.

'அண்ணாத்த' படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா - தனிமையில் ரஜினிகாந்த்!
எனவே எங்களது சம்மேளனம் போராட்டத்தில் பங்கேற்காது என்று கூறப்பட்டது. இந்த சூழலில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக இன்று (டிசம்பர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி