ஆப்நகரம்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டுமா? முன்பதிவு தொடக்கம்!

அரசு விரைவுப் பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு தொடங்கியது.

Samayam Tamil 21 Sep 2022, 11:36 am
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
Samayam Tamil setc bus


இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு போனஸ் எவ்வளவு வரும்? புத்தாடை எங்கே எடுக்கலாம், என்ன பலகாரம் செய்யலாம் என்று திட்டமிடலும் எதிர்பார்ப்பும் எழுவதற்கு முன்னர் மக்களுக்கு முதல் வேலை சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திட வேண்டும் என்பது தான்.

கல்வி, வேலை, தொழில் ஆகியவற்றிற்காக பிற நகரங்களில் வசித்துவருபவர்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களில் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அதேபோல் தொடர் விடுமுறையை கணக்கில் கொண்டு சுற்றுலா செல்லவும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவும் திட்டமிடுவர்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? அரசு முடிவு என்ன?
ஒரே நேரத்தில் லட்சகக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதால் ரயிலில் முன்பதிவு விரைவாக முடிந்துவிட்டது. ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாள்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கும் என ஒவ்வொரு பண்டிகையின் போதும் அரசு தரப்பில் கூறப்பட்டாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.3000 கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் மாநிலத்தின் ஒவ்வொரு ஊர்களுக்கு செல்லவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது: டெல்லிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
இதனால் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவை எதிர்பார்த்து பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் அக்டோபர் 21ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் பயணம் செய்ய நாளை, நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.

அடுத்த செய்தி