ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு; தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் முக்கிய கோரிக்கை!

மாநில அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள ஆசிரியர்கள் சங்கம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 2:47 pm
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொடர் தடுப்பு நடவடிக்கையின் மூலம் வைரஸ் பரவல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கின்றது. பொதுத்தேர்வு நெருங்கும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் நேரிடையாக படிப்பதே சிறந்ததாக அமையும். அதே நேரத்தில் 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளும் ஒரே நேரத்தில் பள்ளி நுழைவு வாயிலில் நுழைந்தால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
Samayam Tamil Online Class


பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் கருத்தறிந்தும், உலக சுகாதாரத்துறையின் கொரோனா இரண்டாவது அலை வீசும் என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் ஏற்று பெற்றோர் - மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி பள்ளிகள் திறப்பினை ஒத்திவைத்ததை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.

மேலும் +2 பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் ஒன்று முதல் 12ஆம் வகுப்புகள் வரை கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்டவை வழியாக அரசு பாடம் நடத்தினாலும், வரும் பிப்ரவரி மாதத்தில் 12ஆம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வு தொடங்க உள்ளது.

TN Diwali Holidays: ஆன்லைன் வகுப்புக்கு விட்டாச்சு தீபாவளி விடுமுறை; எத்தனை நாட்கள் தெரியுமா?

இது எதிர்கால வாழ்க்கையினை நிர்ணயம் செய்யும் தேர்வாக அமையவுள்ளதால் ஆசிரியர் - மாணவர் நேரடி தொடர்பிருந்தால் மட்டும்தான் நம்பிக்கையோடு தேர்வினை எதிர்கொள்ள முடியும்.

எனவே அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையறிந்து குறைந்தபட்சம் ஆசிரியர் - மாணவர்கள் நேரடி தொடர்பு ஏற்படுத்த இணையவழிக் கல்விக்காக அரசு +2 மாணவர்களுக்கு மட்டும் டேட்டா ரீசார்ஜ் செய்துதர ஆவண செய்யும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி