ஆப்நகரம்

அதிக லஞ்சம் பெறும் அரசு ஊழியா்கள்: தமிழகம் முதல் இடம்

ஊழல், லஞ்சம் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும், தெலங்கானா 2வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 20 May 2018, 10:56 am
ஊழல், லஞ்சம் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாகவும், தெலங்கானா 2வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil Money


சி.எம்.எஸ். இந்தியா நிறுவனம், “ஊழல் ஆய்வு 2018” என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆய்வு குறித்து சி.எம்.எஸ். இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்த ஸ்ரீவஸ்தா கூறுகையில், நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் ஊழல் உள்ள மாநிலங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது தொிய வந்துள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தெலங்கானா, 4வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

மேலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கா்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துகின்றன.

குறிப்பாக போக்குவரத்து, காவல்துறை, வீட்டு வசதி, நில ஆவணங்கள், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில் ஊழல் அதிகமாக நடப்பது தொியவந்துள்ளது. ஆதாா் அட்டை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக 7 சதவீத மக்களும், வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக 3 சதவீத மக்களும் தொிவித்துள்ளனா். என்று அலோக் ஸ்ரீவத்சவா கூறியுள்ளாா்.

அடுத்த செய்தி