ஆப்நகரம்

வெயிலில் காயும் மக்களுக்கு ஆறுதல் செய்தி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2021, 2:23 pm
திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tn rain update


ஏனைய உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஒட்டி இருக்கும்.
ஜூன் மாதத்தில் 12ஆம் வகுப்பு தேர்வா? ஆலோசனையில் பள்ளிக் கல்வித்துறை!குமரிக்கடல் பகுதியில் ( 1 கிலோமீட்டர் உயரம் வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 6) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஸ்டாலினை முந்திய எடப்பாடி: இதென்ன புது கணக்கா இருக்கு!
ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெடுங்கல் (கிருஷ்ணகிரி ) 2, பரமத்திவேலூர் ( நாமக்கல் ), கிருஷ்ணகிரி, ஆயக்குடி (தென்காசி ) தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

அடுத்த செய்தி