ஆப்நகரம்

கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை... தமிழகம் முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை மாவட்டம் ஐநூற்றை நெருங்கியுள்ள நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2020, 6:58 pm
தமிழகத்தில் இன்றைய கொரோனா குறித்த நிலவரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொளி வாயிலாக வெளியிட்டார். அதன்படி இன்று தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil அமைச்சர் விஜயபாஸ்கர்


பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1821ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 94 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை கொரோனா சிகிச்சை பெற்றதில் 960 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 23 பேர் இறந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்று காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரை 4 பேர், பெரம்பலூர் மற்றும் விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் ஒரு நாளில் 10,000 மாதிரிகள் சோதனை செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

'' வரலாறு காணாத கடனை மக்கள் மீது சுமத்திவிட்டு, நிதிப் பகிர்வில் உரிமையிழந்துள்ளது அதிமுக ''... ஸ்டாலின் டு ஓபிஎஸ்

மேலும் தமிழகத்தில் நேற்றைய நிலவரத்தை மேற்கோள் காட்டிய அமைச்சர், தொற்று எண்ணிக்கை 1755 ஆக இருந்த நிலையில் அதில் 866 பேர் முழுமையாகக குணமடைந்து விட்டனர் என கூறினார். மேலும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி