ஆப்நகரம்

ஆறு மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்திடுங்க!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Dec 2019, 1:04 pm
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பரவலாக பல இடங்களில் மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழைப் பொழிவு கிடைத்துள்ளது.
Samayam Tamil ஆறு மாவட்டங்களுக்கு கனமழை


சென்னைக்கான மழையின் அளவு 14 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரு தினங்களுக்கான மழை பற்றிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது..! வெறும் பனி மட்டும்தான்... ரிலாக்ஸ்..

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் இருக்கும்.

Chennai Rains: மீண்டும் வெளுக்கப் போகும் கனமழை - இந்தப் பகுதி மக்கள் எல்லாம் உஷாரா இருங்க!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது அதே போல் காரைக்காலில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி