ஆப்நகரம்

கடலோர மாவட்டங்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெய்துவரும் நிலையில் இன்றும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Samayam Tamil 16 Dec 2019, 12:38 pm
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நடந்த மாநில கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கடலோர மாவட்டங்களுக்கு மழை


கடந்த 24 மணி நேரத்தில் தரங்கம்பாடி, காரைக்கால், குடவாசல், நன்னிலம், பொன்னேரி, ஆடுதுறை, கும்மிடிப்பூண்டி, மணல்மேடு ஆகிய பகுதிகளில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னையின் வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மழை: கூலாக தொடங்கிய மன்டே மார்னிங்!

சென்னையில் இன்று காலை நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், போரூர், ஆலப்பாக்கம், வாகனரம், மதுரவாயல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

மழை எங்கெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கு தெரியுமா?

அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், வடகிழக்கு பருவ மழைக்கான இயல்பான மழை அளவு எட்டப்பட்டுவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரிக்கு மழையைத் தரும் வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை அளவு 44 செ.மீ. என்பதாகும். நேற்று வரை பதிவான அளவிலேயே இந்த அளவு கிடைத்துள்ளது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை அளவு சராசரியை விட குறைவாக பதிவாகியுள்ளது.

ஆறு மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்திடுங்க!

இருப்பினும் டிசம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளதால் அந்த அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி