ஆப்நகரம்

அடேயப்பா.. ஏழு மாவட்டங்களுக்கு கனமழை!

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 1:05 pm
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
Samayam Tamil அடேயப்பா ஏழு மாவட்டங்களுக்கு கனமழை


காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துவந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் பக்கம் கனமழை பெய்யவுள்ளது.

தனுஷ்கோடியில் கடல் அரிப்பு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் புதுச்சேரியில் 4 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கம், மண்டபம், திருச்செந்தூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. உத்திரமேரூர், மகாபலிபுரம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Chennai Rains: இங்கெல்லாம் பலத்த மழை; அங்கெல்லாம் மிதமான மழை - இன்றைய வானிலை நிலவரம்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸும் இருக்கும்.

மூன்று மாவட்டங்களுக்கு கனமழை: எந்த ஊருக்கெல்லாம் தெரியுமா?

அடுத்த செய்தி