ஆப்நகரம்

சென்னையில் இன்னும் இரண்டு நாளுக்கு இப்படிதான்: வானிலை ஆய்வு மையம்!

சென்னைக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Nov 2019, 1:17 pm
அரபிக் கடல் பகுதியில் க்யார், மஹா என இரு புயல்கள் உருவான நிலையில் வங்க கடல் பகுதியில் புதிதாக புல் புல் என்ற புயல் உருவாகியுள்ளது.
Samayam Tamil சென்னையில் இன்னும் இரண்டு நாளுக்கு இப்படிதான்: வானிலை ஆய்வு மையம்!


இதுதொடர்பாக இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று (நவம்பர் 7) மத்திய வங்க கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு புல் புல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று தீவிரப்புயலாக மேற்கு வங்கம், வங்க தேசம் பகுதிகளுக்கு செல்லும்” என்று கூறியுள்ளார்.

சூறாவளியாய் சுழன்று அடிக்கப் போகும் ’புல்புல்’ புயல்; தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா?

தமிழ்நாட்டின் மழை நிலவரம் குறித்து கூறிய அவர், “நவம்பர் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

புல் புல் புயம் மையம் கொண்டுள்ளதால் மத்திய வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் இரண்டு நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னி எடுக்கும் கனமழை; மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் கிடுகிடு அதிகரிப்பு!

கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ மழையும், சிவகங்கையில் 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

டில்லியைப் போல சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. மாநகரில் பல இடங்களில் மாசடைந்த காற்று பனிபோல் சூழ்ந்துள்ளது. நவம்பர் 8ஆம் தேதி வரை இது தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார். மழை பொழிவு இருந்தால் இந்த காற்று மாசு குறையும் என கூறப்பட்டது.


இந்நிலையில் சென்னையில் இரண்டு நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி