ஆப்நகரம்

தமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட குறைவாகத் தான் பெய்யும் – வானிலை மையம்

தமிழகம், கா்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட குறைவாகத்தான் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2019, 4:37 pm
தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், நாளை, நாளை மறுநாள் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rain 1


சென்னையில் இன்று செய்தியாளா்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மையம் இயக்குநா் புவியரசன், அரபிக்கடலில் இன்று காலை உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.

இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது. இருப்பினும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கா்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான அளவிலேயே தென்மேற்கு பருவமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கரூா், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மைய இயக்குநா் தொிவித்துள்ளாா்.

மேலும் மீனவா்கள் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி