ஆப்நகரம்

Chennai Rains: தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Jul 2019, 9:39 am
சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain 1


தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் கிழக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

Also Read: முன்னாள் மேயர் கொலையில் துப்பு கிடைக்காமல் விழிப்பிதுங்கும் நெல்லை காவல்துறை

ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தியாகராயநகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Also Read: இன்று பரோலில் வெளியே வருகிறார் நளினி

மேலும் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நீலகிரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் விமான நிலையம், ஆலந்தூர் பகுதிகளில் 7 செ.மீ. மழையும், காட்டாங்குளத்தூர், அண்ணா பல்கலைக்கழகம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ., மெரினா கடற்கரை பகுதியில் 5 செ.மீ. மழை, செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

அடுத்த செய்தி