ஆப்நகரம்

மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 May 2019, 11:37 am
கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் மழைப்பொழிவு தொடர்ந்து இருக்கும்- வானிலை மையம்
தமிழகத்தில் மழைப்பொழிவு தொடர்ந்து இருக்கும்- வானிலை மையம்


பல இடங்களில் மழைப்பொழிவு காரணமாக்க அக்கினி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு சற்று குளிர்ச்சி கிடைத்துள்ளது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல் பொதுமக்கள் பலர் தப்பித்துவிட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி