ஆப்நகரம்

தமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல்; அமைச்சர் வேலுமணி தகவல்!

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jun 2018, 2:35 pm
சென்னை: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Velumani


சென்னையின் சிந்தாதிரிபேட்டையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ குடிநீர் ஆய்வு கூட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், வார்டுகளை வரைமுறைப்படுத்துவது மிகப்பெரிய விஷயம். யாராலும் வெற்றிகரமாக முடிக்க முடியாது.

நாங்கள் அதனைக் கையில் எடுத்துள்ளோம். விரைவில் முடிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் சமர்பிப்போம். கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் ஒரு லட்சம் வார்டுகள் உள்ளன. சமீபத்தில் ஏழு மண்டலங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி கருத்துக் கேட்டுள்ளதாக கூறினார். இதுவரை 18,900 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்கள் செய்யப்படும். இவற்றை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். நீதிமன்ற வழக்கு காரணமாக, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இது விரைவில் நடத்தப்படும். உள்ளாட்சிகளுக்கான நிதியை வழங்கக் கோரி, மத்திய அரசிடம் முறையிட்டுள்ளோம். மேலும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான பட்டியலில் திண்டுக்கல் நகரையும் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.

Tamil Nadu will hold local body elections soon, minister says.

அடுத்த செய்தி