ஆப்நகரம்

தமிழ் கடல் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழறிஞரும், மேடைப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்.

Samayam Tamil 18 Aug 2022, 1:45 pm
தமிழறிஞரும், மேடைப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன் காலமானார்.
Samayam Tamil நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்


இலக்கிய சொற்பொழிவு, ஆன்மீக சொற்பொழிவு, சிறந்த பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர் என பன்முகத்தன்மை கொண்ட நெல்லை கண்ணன் தமிழ் கடல் என்றழைக்கப்படுபவர். காமராஜரின் தீவிர விசுவாசியான அவர், காங்கிரஸ் கட்சியின் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்டவர். அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

காமராஜர், மூப்பனார், கண்ணதாசன் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்த நெல்லை கண்ணன், ஆரம்பகாலத்தில் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை கொண்டவர். கலைஞர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தும் வந்தார். 1996ஆம் ஆண்டில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அந்த தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்.
அவரு தோரணைய பாத்தாலே தெரியும்... லெப்ட் ஹேண்டில் டீல் செய்த பிடிஆர்!
ஆனால், 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தவர் நெல்லை கண்ணன். அந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, முதல்வர் ஸ்டாலினை வெகுவாக பாராட்டி பேசி வந்தவர் நெல்லைக் கண்ணன். சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில், “காமராஜரைப்போல் முழு நல்லவனாக உருவாகிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.” என்று கண்ணீர் மல்க பேசினார் நெல்லைக் கண்ணன்.

தமிழக அரசின் இளஙோவடிகள் விருதை அண்மையில் பெற்ற நெல்லைக் கண்ணனின் குரல் 1970களில் இருந்து தமிழ் மேடைகளில் ஒலித்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி