ஆப்நகரம்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் காலமானார் ( வயது 91). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிலம்பொலி செல்லப்பன். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 6 Apr 2019, 8:58 am
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல்நலக்குறைவால் காலமானார் ( வயது 91). தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிலம்பொலி செல்லப்பன். அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil wed-comsoon


சிலம்பொலி செல்லப்பன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் டிசம்பர் 22, 1929ல் பிறந்த இவர், கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். சிறந்த பேச்சாளர். உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்.

சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

அடுத்த செய்தி