ஆப்நகரம்

எழுத்தாளர் சா.கந்தசாமி மறைந்தார்!

எழுத்தாளர் சா. கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

Samayam Tamil 31 Jul 2020, 11:21 am
எழுத்தாளர் சா.கந்தசாமி இன்று (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 81.
Samayam Tamil tamil writer sa kandasamy


சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்த சாமி இதய நோய் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மெட்ரோ நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெ. பெயர்!

சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழக இலக்கிய உலகிற்கு அறிமுகமான சா.கந்தசாமி 1998ஆம் ஆண்டு விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி வருது பெற்றார். கசடதபற இலக்கிய இதழை உருவாக்கினார்.

எழுத்து மட்டுமல்லாமல் குறும்படங்கள், ஆவணப்படங்கள் இயகுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சுடுமண் சிலைகள் தொடர்பான இவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்க்கை குறித்து ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார். 1989ஆம் ஆண்டு சா. கந்தசாமி இயக்கிய காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.

பேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்க வாய்ப்பா? இதுக்கு பின்னால இப்படி ஒரு பிரச்சினை!

சா.கந்தசாமி மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மறைந்தாரே சா.கந்தசாமி! ‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே! தன்மானம் - தன்முனைப்பு தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ! சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி