ஆப்நகரம்

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது

பிரபல தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 21 Dec 2016, 2:54 pm
புதுதில்லி: பிரபல தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil writer vannadasan has won sahitya akademi award for 2016
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது


வண்ணத்தாசன் எழுதிய 'ஒரு சிறு இசை' என்ற சசிறுகதை தொகுப்புக்காக இந்த சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள விழாவில் வண்ணதாசனுக்கு விருது வழங்கப்படுகிறது.

கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயரைக் கொண்ட வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற பெயரிலும் கவிதைகளை எழுதி வருகிறார். நெல்லையைச் சேர்ந்த வண்ணதாசன், இலக்கியவாதியும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான தி.க.சிவசங்கரனின் மகனாவார்.

கடந்த 1962ஆம் ஆண்டு முதல் சிறுகதைகளை எழுதி வரும் வண்ணதாசன், கலைக்க முடியாத ஒப்பனைகள், சமவெளி, கனிவு, நடுகை, பெயர் தெரியாமல் ஒரு பறவை போன்ற ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கத்தில் 'சின்னு முதல் சின்னு வரை' என்ற நாவல் சமூக சிந்தனை வாய்ந்ததாகும்.

புதிதாக எழுத்தாளர்களாக வருபவர்கள் வண்ணதாசனின் நூல்களை படிக்க வேண்டும் என்று கவிஞர் சுஜாதா பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இன்குலாபின் சிறுகதை தொகுப்புக்கும் 'ஒரு சிறு இசை' நூலுக்கும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.

இவரது எழுத்து சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மேலும், இலக்கியச் சிந்தனை, விஷ்ணுபுரம் விருது, ஒளியிலே தெரிவது என்ற சிறுகதைக்காக சுஜாதா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற வண்ணதாசன் தற்போது எழுத்துத்துறையில் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார்.

Tamil writer Vannadasan has won this year's Sahitya Akademi award for his short story collection Oru Siru Isai.

அடுத்த செய்தி