ஆப்நகரம்

யார் அந்த சமூக விரோதிகள் - விளக்கம் கோரி ரஜினி வீடு முற்றுகை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என இழிவுபடுத்தியதாக கூறிய ரஜினியை எதிர்த்து தமிழ் மக்கள் ஜனநாயக கட்சியினர் அவர் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

Samayam Tamil 31 May 2018, 5:21 pm
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என இழிவுபடுத்தியதாக கூறிய ரஜினியை எதிர்த்து தமிழ் மக்கள் ஜனநாயக கட்சியினர் அவர் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
Samayam Tamil rajinikanth


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க நேற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.

நலம் விசாரித்த பின்னர் பேசிய ரஜினிகாந்த், “போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூக விரோதிகள் நுழைந்ததால் கலவரமானது. போலீஸார் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால் தான் போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸாரை தாக்குவதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் சமூக விரோதிகள் நுழைந்ததால் கடைசியில் போரட்டம் கலவரமானது.” என கருத்து தெரிவித்தார்.

ரஜினிக்கு எதிர்ப்பு :
போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினி கூறிய கருத்துக்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துவ் வருகின்றனர்.

ரஜினி வீடுமுற்றுகை:
ரஜினி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவேண்டும், சமூக விரோதிகள் என்றால் யார் என்பதை விளக்க வேண்டும் என வலியுறுத்தி ரஜினி வீட்டை முற்றுகையிட தமிழக மக்கள் ஜனநாயக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஜினி வீட்டுக்கு 300 மீட்டர் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி