ஆப்நகரம்

தமிழகக் காவல்துறை சதந்திரமாக செயல்படுகிறது: முதல்வர் எடப்பாடி உறுதி

சென்னை: காவல்துறையின் செயல்பாடுகளில் அரசு தலையிடவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடக் கூறியுள்ளார்.

TNN 8 Jul 2017, 11:05 am
சென்னை: காவல்துறையின் செயல்பாடுகளில் அரசு தலையிடவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடக் கூறியுள்ளார்.
Samayam Tamil tamilandu government has no intervention in police department says edappadi palanisamy
தமிழகக் காவல்துறை சதந்திரமாக செயல்படுகிறது: முதல்வர் எடப்பாடி உறுதி


சட்டப்பேரவையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துப் பேசினார்.

சிறிய குறைகளைக்கூட பூதாகரமாக்கி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. தமிழகத்தில் மிக குறைவான அளவிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. திருடுபோன சொத்துகளை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளன. போலீசாருக்கு தேவையானவற்றை இந்த அரசு கொடுத்து வருகிறது. என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையின் நடவடிக்கைகளில் அரசு தலையீடு இல்லை. காவல்துறை சுதந்திரமாகவே செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி