ஆப்நகரம்

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழக மாணவி தற்கொலை!!

டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 28 Oct 2018, 1:42 pm
டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் தமிழக மாணவி உயிரிழப்பு!!
டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் தமிழக மாணவி உயிரிழப்பு!!


தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர், வடமாநிலங்களில் படித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு மன உளைச்சல்களுக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கு இருக்கும் சூழல்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி, டெல்லியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கரோல் பார்க் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனிடையே, அவர் மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி