ஆப்நகரம்

ஹிந்தி பேசும் தமிழர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்வு!

ஹிந்தி பேசும் தமிழர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 1 Oct 2018, 2:45 pm
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போரட்டம் நடைபெற்ற நிலையில், பலர் ஹிந்தி மொழி கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பில்லமல் இருந்தது.இதனிடையே, தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச தொடர்கள் ஒளிபரப்பு துவங்கிய நிலையில்,மக்களுக்கு ஹிந்தி மொழி மீதான மோகம் சிறிது அதிகரித்தது.
Samayam Tamil 66021481


மாநிலத்தில்சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ் பள்ளிகளிலும்,இரண்டு மற்றும் மூன்றாம்பாடத்தேர்வாக ஹிந்தி மொழிப்பாடங்கள்உள்ளது. மக்களும் தங்கள்வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்காக வடமாநிலங்களில் தற்போது அதிகளவில் வேலைக்குசெல்கின்றனர்.

இதனால் அதிகமானோர் ஹிந்தி மொழியை கற்றுத் தேர்ந்து உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், இதே காலகட்டத்தில் கன்னடம் பேசும் தமிழர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் சரிவடைந்துள்ளது

அடுத்த செய்தி