ஆப்நகரம்

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Mar 2018, 4:05 pm
நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
Samayam Tamil Tamilisai-Soundararajan-1


பாஜக மாநில தலைவர் தமிழிசை இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 7ம் தேதி தான் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால், அடுத்த குறுகிய காலத்திலே நேற்று நள்ளிரவு மாவட்ட தலைவர் வீட்டில் இருந்து காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரிய சம்பவம். கோவை போன்ற இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது, காவல்துறையினர் எந்த அளவிற்கு பாதுகாப்பு அளிக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது. எச்சரிக்கையாக கையாள வேண்டியதை அஜாக்கரதையாக காவல்துறையினர் கையாளுகின்றனர்.

இது தான் பாஜகவினர் மீது நடத்தப்படுகின்ற கடைசி தாக்குதல். இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது. இந்துக்களின் ஓட்டு மட்டும் உங்களுக்கு வேண்டும். ரதம் வேண்டாமா? இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்த தமிழ். பெரியார் பிறந்தது பெரிதா? இல்லை நாயன்மார்கள் ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என்பதை வருங்காலத்தில் பார்ப்போம்.”

இவ்வாறு தமிழிசை கூறினார்.

அடுத்த செய்தி