ஆப்நகரம்

குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கனிமொழிக்கு தமிழிசை சராமாரி கேள்வி

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Samayam Tamil 23 Sep 2018, 3:51 pm
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழிக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil tamilisai-soundarajan
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் கனிமொழிக்கு தமிழிசை கேள்வி


இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளத்தை அமைப்பது தொடர்பாக 2013-ம் ஆண்டில் கருணாநிதி கடிதம் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.


மங்கள்யான் குலசேகரபட்டினத்திலிருந்து ஏவப்பட்டிருந்தால் 1350 கிலோவிற்கு பதில் 1800 கிலோவரை எடையை எடுத்துச் சென்றிருக்கமுடியும் என இஸ்ரோ திரவ எரிபொருள் மையத்தின் முன்னாள் தலைமை பொதுமேலாளர் கூறியிருப்பதையும் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பூமத்திய ரேகைக்கு நெருக்கம், திரவ எரிபொருள் மையத்தின் அருகாமை, சாதகமான தட்பவெட்ப சூழல் ஆகியவை குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைக்க உகந்தவையாக இருப்பதால், அங்கு நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழியின் வேண்டுகோள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக - காங்.கூட்டணி ஆட்சியில் ஏன் அமைக்கவில்லை? 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் செய்ய தவறிவிட்டு கடிதம் எழுதுவது ஏன்????" என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி