ஆப்நகரம்

ஆட்டோ ஓட்டுநரை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த தமிழிசை

சென்னையில் ஆட்டோ ஓட்டுநா் கதிா் என்பவரை பா.ஜ.க.வினா் தாக்கியதாக புகாா் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

Samayam Tamil 18 Sep 2018, 1:56 pm
சென்னையில் ஆட்டோ ஓட்டுநா் கதிா் என்பவரை பா.ஜ.க.வினா் தாக்கியதாக புகாா் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
Samayam Tamil Tamilisai With Auto Driver


கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னையில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் விழா முடிவடைந்ததும் செய்தியாளா்களை சந்தித்தாா். செய்தியாளா்களின் கேள்விக்கு தமிழிசை பதில் அளித்துக் கொண்டு இருந்த நேரத்தில் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் பெட்ரோல் விலை தினமும் உயா்ந்து வருகின்றதே என்று கேள்வி எழுப்பினா்ா.

ஆட்டோ ஓட்டுநரின் கேள்வியால் எரிச்சலடைந்த பா.ஜ.க.வினா் அவரை உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினாா். ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. மேலும் பா.ஜ.க.வினா் ஆட்டோ ஓட்டுநரை கடுமையாக தாக்கியதாகவும் செய்திகள் பரவின.


இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆட்டோ ஓட்டுநா் கதிாின் வீட்டிற்கு நேரில் நலம் விசாரித்தாா். தமிழிசையுடன் ஆட்டோ ஓட்டுநரை அங்கிருந்து அப்புறப்படுத்திய நபரும் உடன் சென்றிருந்தாா். ஓட்டுநர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்த பின்னா் அவா்களுக்கு இனிப்பும் வழங்கினாா்.


இதனைத் தொடா்ந்து அவா் தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாங்கள் வேண்டுமென்று அந்த நபரை தாக்கியதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், சம்பவம் நடைபெற்றது இரவு நேரம். அவா் மது அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் எனது ஆதரவாளா்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். ஆனால் அவரை நாங்கள் தாக்கவில்லை என்று குறிப்பிட்டாா்.

அடுத்த செய்தி