ஆப்நகரம்

ஊடக விவாதங்களில் இனி பாஜக பிரதிநிதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள்- தமிழிசை!

ஊடக விவாதங்களில் இனி பாஜக பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என அக்கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Jul 2019, 10:45 pm
தொலைக்காட்சி விவாதங்களில் சமவாய்ப்பும் இல்லாததால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil ஊடக விவாதங்களில் இனி பாஜக பிரதிநிதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள்- தமிழிசை!
ஊடக விவாதங்களில் இனி பாஜக பிரதிநிதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள்- தமிழிசை!


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு: “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயளிப்பதாக உள்ளது.

ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சம வாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பிரநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்ப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் யாரும் ஊடக விவாதங்களில் கலந்துக்கொள்ள கூடாது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு தான் இந்த தடையை அதிமுக நீக்கியிருந்தது.

இந்நிலையில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தமிழிசை சௌந்திரராஜன் ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி