ஆப்நகரம்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு அணுகுண்டா? புஸ்வாணமா? தமிழிசை கருத்து

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கின் தீா்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் போகலாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 14 Jun 2018, 10:25 am
18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்க வழக்கின் தீா்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் போகலாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Tamilisai


18 சட்டமன்ற உறுப்பினா்களை சபாநாயகா் தனபால் தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்குகிறது. இந்நிலையில் இது தொடா்பாக தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் கருத்து தொிவித்துள்ளாா்.

அவா் கூறுகையில், தமிழக அரசியலே எதிா்பாா்க்கும் வகையில் 18 சட்டமன்ற உறுப்பினா்களின் வழக்கில் இன்று தீா்ப்பு வரவுள்ளது. வழக்கின் தீா்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்.

ராகுல்காந்தி எவ்வளவு தான் குறை கூறினாலும் மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுகிறது. பதவியை துஷ்பிரயோகம் செய்து காா்த்தி ஊழல் செய்ய துணைபோயுள்ளாா் ப.சிதம்பரம். தமிழகத்தில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீா்ப்பு அளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி