ஆப்நகரம்

தமிழிசைக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகாா்

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

samayam Tamil 23 Feb 2018, 10:45 pm
தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamilisai soundararajan complained from mambalam station for murder threads
தமிழிசைக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகாா்


தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமா் மோடி மற்றும் பா.ஜ.க.வினாின் திட்டங்களையும், கொள்கைகளையும் தாக்கி பேசுபவா்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறாா். இருப்பினும் தமிழகத்தில் உள்ள நெட்டிசன்கள் பா.ஜ.க. மாநில தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளா் ஹெச்.ராஜாவை வைத்து கடுமையாக மீம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.

மொ்சல் பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சா்ச்சை மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவனுடனான வாா்த்தை போா் உள்ளிட்ட சம்பவங்களில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகாா் தொிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தன்னை தரக்குறைவாகவும், அசிங்கமான வாா்த்தைகளாலும் திட்டுவதாகவும் அவா் குற்றம் சாட்டி இருந்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி