ஆப்நகரம்

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன் சித்தப்பா: வசந்தகுமார் மறைவுக்கு தமிழிசை கண்ணீர்!

நாடாளுமன்றா உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு தெலங்கானா ஆளுநரும், குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Samayam Tamil 28 Aug 2020, 9:23 pm
கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கடந்த 10ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் அவருக்கு வயது 70.
Samayam Tamil தமிழிசை
தமிழிசை


பணியாளராக விஜிபி நிறுவனத்தில் பணியை துவங்கியவர், சிறு கடையை ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி உழைப்பால் உயர்ந்த வசந்தகுமாரின் மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வந்தகுமாரின் சகோதரர் குமரி அனந்தனின் மகளும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை, தனது சித்தப்பா வசந்தகுமாரின் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அனைவரும் கண் கலங்க செய்துள்ளது.

கொரோனா: காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சித்தப்பா !

நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்... அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்...

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்...

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது... வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது...

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் ...கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது...

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்...” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி