ஆப்நகரம்

எங்களுக்கும் மொழி உணர்வு அதிகம்: தமிழிசை

பாஜகவினருக்கு மற்றவர்களை விட மொழி உணர்வு அதிகம் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Feb 2018, 2:39 pm
சென்னை: பாஜகவினருக்கு மற்றவர்களை விட மொழி உணர்வு அதிகம் என்று பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilisai soundararajan defends budget address in hindi
எங்களுக்கும் மொழி உணர்வு அதிகம்: தமிழிசை


மத்திய பட்ஜெட் 2018-19ஐ நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையிலேயே இருக்கிறது. இதில் தமிழகத்தைப் புறக்கணித்துவிட்டதாக கூறமுடியாது என்று கூறினார்.

பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்தியில் பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பிற மாநிலத்தினருக்கும் புரியும் வகையில்தான் இந்தியில் பேசினார். ஆனால், ஆங்கிலத்திலும் பேசியிருக்கிறார் என்று கூறினார்.

தொடர்ந்து, “தயவுசெய்து மொழியை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதை ஏற்கமாட்டார்கள்” என்று கூறினார்.

அடுத்த செய்தி