ஆப்நகரம்

பாலியல் வன்கொடுமை: 17 பேருக்கு தூக்கு தண்டை விதிக்க வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன்!

சென்னை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

Samayam Tamil 17 Jul 2018, 4:04 pm
சென்னை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்குதூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
Samayam Tamil tamizhisai01_07162_20089


சென்னைபுரசைவாக்கத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை17 பேர்பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தாய் அயனாவரத்தில்உள்ள காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்பட்டையில்அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேரை போக்சோ மற்றும்கொலை மிரட்டல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்துதமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது :-

இந்த சம்பவம் கடும் மனவருத்தத்தைஏற்படுத்தியுள்ளது. 17 பேருக்கும் கண்டிப்பாக தூக்குதண்டனைவாங்கிக் கொடுக்க வேண்டும். இவர்கள் மீது எந்த இறக்கமும் காட்டக்கூடாது. மனித உரிமை ஆர்வலர்கள் தடுத்தாலும் இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்க்கொடுக்க வேண்டும். இதுபோன்ற மிருக செயலில் ஈடுபடுபவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி