ஆப்நகரம்

அசிங்கமான வார்த்தைகளில் திட்டுவதாக தமிழிசை ஆதங்கம்!

சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருந்தார்

TNN 25 Oct 2017, 4:32 pm
சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil tamilisai sounderrajan condemns people for scolding her in bad words through phone calls
அசிங்கமான வார்த்தைகளில் திட்டுவதாக தமிழிசை ஆதங்கம்!


இதற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தனக்கு போன் செய்து வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,”ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறியிருந்தேன். அது தவறான கருத்து என சிலர் கருதலாம். அதற்காக போன் செய்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது எப்படி நியாயமாகும்?” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்ததற்காக அவரை பலர் போன் செய்து திட்டியதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilisai Sounderrajan condemns people for scolding her in bad words through phone calls.

அடுத்த செய்தி