ஆப்நகரம்

இட்லி சாப்பிட்டு ஜி.எஸ்.டி. வரியை ஆய்வு செய்யும் தமிழிசை.!

தமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன், உணவகத்திற்கு சென்று இட்லி சாப்பிட்டு, ஜி.எஸ்.டி. வரி சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

TNN 20 Nov 2017, 12:41 pm
தமிழக பாஜக தலைவர், தமிழிசை சவுந்தரராஜன், உணவகத்திற்கு சென்று இட்லி சாப்பிட்டு, ஜி.எஸ்.டி. வரி சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
Samayam Tamil tamillisai soundarajan went to hotel for checking gst
இட்லி சாப்பிட்டு ஜி.எஸ்.டி. வரியை ஆய்வு செய்யும் தமிழிசை.!


சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முடிவில் உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 மற்றும் 12 சதவீதம் என்பதிலிருந்து 5 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 15ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதனால் உணவு பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், சில உணவகங்களில் விலை குறைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு பின் உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையை ஆய்வு செய்யும் பணியில், பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இறங்கினார்.

அதற்காக உணவகம் ஒன்றில் 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டு பில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரியை குறைத்த பின்னர் உணவகங்கள் உணவு விலையை குறைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

அடுத்த செய்தி