ஆப்நகரம்

ஜூன் மாதத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு?

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 4 May 2020, 4:17 pm
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேசமயம், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக பின்பற்றி வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களுக்கு ஏற்ப சில தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல் துணை ஆணையருக்கு கொரோனா: அதிர்ச்சியில் சென்னை போலீஸ்

முன்னதாக, தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ்2 தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்றது. 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

இதனிடையே, பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா: பிஃஎப் ஊழியர்கள் ரூ.2.5 கோடி நிவாரணம்!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவில்லை. ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிகல்வித்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வருகிற ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி