ஆப்நகரம்

தமிழகத்தில் துக்ளக் ஆட்சி நடந்து வருகிறது: கருணாநிதி

அ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி” என்பதற்கு ஒரு உதாரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்

TNN 30 Oct 2016, 10:35 pm
சென்னை : அ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி” என்பதற்கு ஒரு உதாரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil tamilnadu admk govt administration is like a thuklak tharpar
தமிழகத்தில் துக்ளக் ஆட்சி நடந்து வருகிறது: கருணாநிதி



அ.தி.மு.க. ஆட்சி என்றால் “துக்ளக் தர்பார் ஆட்சி” என்பதற்கு ஒரு உதாரணம்? Read: https://t.co/98LosuECKp — KalaignarKarunanidhi (@kalaignar89) October 30, 2016 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தீபாவளியையொட்டி அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளம் முன்கூட்டியே 28ம் தேதி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அறிவித்த சில நிமிடங்களிலேயே முன்கூட்டியே இல்லை வழக்கம் போல தான் என்று அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி ஊதியத்தை முன்கூட்டியே வழங்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் ஏமாற்றமடைந்துள்ளனர்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி