ஆப்நகரம்

அம்பேத்கா் சட்ட பல்கலையில் நாளை நடக்கவிருந்த தோ்வுகள் ஒத்திவைப்பு

கனமழை காரணமாக தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைகயில் நாளை நடக்கவிருந்த தோ்வு ஒத்திவைப்பு.

TOI Contributor 3 Nov 2017, 11:18 pm
கனமழை காரணமாக தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைகயில் நாளை நடக்கவிருந்த தோ்வு ஒத்திவைப்பு.
Samayam Tamil tamilnadu ambedkar law university exams postponed
அம்பேத்கா் சட்ட பல்கலையில் நாளை நடக்கவிருந்த தோ்வுகள் ஒத்திவைப்பு


வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, மின் இணைப்பு துண்டிப்பு என பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் கடந்த நான்கு தினங்களாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில், இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

மழை தொடரும் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாடு அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் தோ்வு நடைபெறும் என்றும், தோ்வுகள் ஒத்திவைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி