ஆப்நகரம்

புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 4 Dec 2016, 7:36 am
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tamilnadu and puducherry may get rain today in next 24 hours
புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், போதிய வடகிழக்கு பருவ மழை பெய்யவில்லை. இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, புயலாக மாறியது. இந்த புயல் காரைக்கால் அருகே கரையை கடந்ததால், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுமத்ரா தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இது வலுவடைந்து புயலாக மாறினால், அதற்கு “வார்தா” என்று பெயரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் பட்சத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்தமான் அருகே நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu and Puducherry may get rain today in next 24 hours says IMD.

அடுத்த செய்தி