ஆப்நகரம்

முழு கடை அடைப்பு போராட்டம்: போக்குவரத்தில் பாதிப்பில்லை

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 25 Apr 2017, 10:18 am
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamilnadu bandh shops shutdown normalcy in transportation
முழு கடை அடைப்பு போராட்டம்: போக்குவரத்தில் பாதிப்பில்லை


விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்ததையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனிடையே, அரசு போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ள காரணத்தால் பேருந்து சேவை பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால், அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதேபோல், பால் விநியோகத்திலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்துக்கு வணிகர்கள், சிறுவியாபாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் 2 காட்சிகள் மற்றும் இன்று ஒரு நாள் அனைத்து படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நகரின் பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி