ஆப்நகரம்

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ, திருமா கைது

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் நிறுவன தலைவர் திருமாவளவன் ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 16 Sep 2016, 10:08 am
சென்னை: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் நிறுவன தலைவர் திருமாவளவன் ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil tamilnadu bandh vaiko thiruma arrested
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வைகோ, திருமா கைது


காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்களையும் தமிழக வாகனங்களையும் தாக்கி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழக வாகனங்கள் பல இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்களில் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் திருச்சி ரயில்வே சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த செய்தி