ஆப்நகரம்

முழு அடைப்பு போராட்டம்: உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

நாளை எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ள நிலையில், தமிழக முதல்வர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 7:19 pm
நாளை எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ள நிலையில், தமிழக முதல்வர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Samayam Tamil edappadi


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த மாதம் மார்ச் 29ம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்த நிலையில், இதன் எதிரொளியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி