ஆப்நகரம்

2ஜி தீர்ப்பு வந்த பிறகும் காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை!

2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால், காங்கிரஸ் கட்சி வேறு ஊழலே செய்யவில்லை என்று அர்த்தமா என பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

TNN 21 Dec 2017, 4:34 pm
2ஜி ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால், காங்கிரஸ் கட்சி வேறு ஊழலே செய்யவில்லை என்று அர்த்தமா என பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil tamilnadu bjp leader tamilisai soundararajan replied about 2g verdict
2ஜி தீர்ப்பு வந்த பிறகும் காங்கிரஸ் கட்சியை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை!


நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிபிஐ தரப்பு குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.ராஜா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விடுதலை செய்தார்.

மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஒரு வழக்கின் தீர்ப்பு வந்துவிட்டால், காங்கிரஸ் கட்சி ஊழலே செய்யவில்லை என்று அர்த்தமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,”களத்தில் ஒரு குற்றச்சாட்டு இருக்கும்போது அதை முன்னிலைப்படுத்தி தேர்தலைச் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். இதில் தீர்ப்பு வந்துவிட்டதால் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. இன்னும் 1.76 லட்சம் கோடிக்கான கணக்கும், கார்த்திக் சிதம்பரம் மீதான குற்றச்சாட்டும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. நாட்டில் லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே உங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி