ஆப்நகரம்

பரபரப்பான சூழலில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, இன்று தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.

TOI Contributor 2 May 2017, 10:21 am
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, இன்று தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.
Samayam Tamil tamilnadu cabinet meeting today
பரபரப்பான சூழலில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது!


காலை 11:00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள உள்ள இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெற இருந்ததால், மானிய கோரிக்கை மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்தான பின், அதிமுக., இரு அணிகளை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக, முடிவெடுக்காமல் இருந்தது.

தற்போதைய சூழலில், இரு அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலை, உருவாகி உள்ளது. எனவே, சட்டமன்றத்தை கூட்டி, துறை வாரியாக, மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில், வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய, உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை குறித்தும், குடிநீர் பிரச்னை, 'நீட்' தேர்வு, விவசாயிகள் பிரச்னை உட்பட, பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், மானிய கோரிக்கையின்போது, துறை வாரியாக வெளியிட உள்ள, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்; நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் இறுதி செய்யப்பட உள்ளதாக, அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Tamilnadu: Cabinet meeting to be held today.

அடுத்த செய்தி