ஆப்நகரம்

கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!

ஆசிய தடகளப் போட்டியின் 800 மீ தடகளப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 2 May 2019, 2:35 pm
ஆசிய தடகளப் போட்டியின் 800 மீ தடகளப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Samayam Tamil mari


கத்தாரில் உள்ள தோஹாவில் 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 800 மீ தடகளப் போட்டியில் கலந்து கொண்ட திருச்சியைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதைத் தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என்று பலரும் கோமதி மாரிமுத்துவின் சாதனையை பாராட்டி பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் பரிசுத்தொகையை அறிவித்தார். மேலும், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கோமதி மாரிமுத்துவிற்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சம், ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். மேலும், திமுக சார்பில் கோமதி மாரிமுத்துவிற்கு ரூ.10 லட்சமும், வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவிற்கு ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி