ஆப்நகரம்

விரைவில் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: முதல்வர் பழனிச்சாமி உறுதி

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துறைமுகம்–மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று இன்று தெரிவித்துள்ளார்.

TNN 28 Feb 2017, 11:48 am
டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துறைமுகம்–மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று இன்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tamilnadu chief minister edappadi palaniswami assures to implement maduravoyal flyover project
விரைவில் துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: முதல்வர் பழனிச்சாமி உறுதி


டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தமிழக நலன் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறார். நேற்று டெல்லி சென்ற அவர் தனது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று மத்திய சாலைப்போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய மாநில அரசுகள் இணைந்து துறைமுகம்–மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறினார். மேலும், துறைமுகம்–மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் வெங்கைய்யா நாயுடு மற்றும் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்திக்கிறார். பின்னர், இரவு 7 மணியளவில் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

அடுத்த செய்தி