தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள காவலர்களுக்கான ரத்தத்தான முகாமை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைத்தார்.
இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள், இன்று சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.
காவலர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இரத்ததான முகாமை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையில் நடைபெறும் இரத்ததான முகாமில் சுமார் 2000 காவலர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்ய உள்ளனர். அதேபோல், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 20,000 காவலர்கள் இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்திற்கு மாதந்தோறும் 33,000 முதல் 35,000 யூனிட்கள் வரை ரத்தம் தேவைப்படும் நிலையில், இந்த இரத்ததான முகாம் மூலம் சுமார் 20,000 யூனிட்கள் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த இரத்ததான முகாமில் பெறப்படும் வீணாக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதில் பெறப்படும் இரத்தம் ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்தப்படும் எனவும், அவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கான வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள், இன்று சிறப்பு இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.
காவலர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த இரத்ததான முகாமை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார். இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்திற்கு மாதந்தோறும் 33,000 முதல் 35,000 யூனிட்கள் வரை ரத்தம் தேவைப்படும் நிலையில், இந்த இரத்ததான முகாம் மூலம் சுமார் 20,000 யூனிட்கள் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, இந்த இரத்ததான முகாமில் பெறப்படும் வீணாக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதில் பெறப்படும் இரத்தம் ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பயன்படுத்தப்படும் எனவும், அவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கான வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.