ஆப்நகரம்

சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பகிரங்க குற்றச்சாட்டு!

சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பகிரங்க குற்றச்சாட்டு!

TOI Contributor 7 Feb 2017, 10:19 pm
''நான் செய்த பணிகள் அனைத்தும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது'' என்று சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்
Samayam Tamil tamilnadu chief minister o panneer selvam blaming sasikala and her family
சசிகலா மற்றும் குடும்பத்தினர் மீது முதல்வர் பன்னீர் செல்வம் பகிரங்க குற்றச்சாட்டு!


ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, கழகத்தின் அவைத் தலைவராக மதுசூதனன் இருக்க வேண்டும் என்றும் என்னை முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறினார். அம்மா உயிருடன் இருக்கும் பொது என்னை முதல்வராக இருக்க சொன்னார்கள். நான் அதை ஏற்றுக் கொண்டு இருந்தேன்.

சின்னமாவை போதுச்செயள்ளார் ஆகக் வேண்டும் என்று பாஸ்கர் என்னிடம் கூறினார். நான் சின்னம்மாவிடம் அந்தக் கருத்தை சொன்னேன். பொதுக்குழுவில் என்னை தேர்ந்தெடுக்கப்பட்ட பணியை நான் ஏற்று கொஞ்சமும் பிசகாமல் செய்தேன். வர்தா புயலின்போது அமைச்சர்கள் மற்றும் மக்களுடன் சேர்ந்து நன்றாக செய்தோம். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்று கூறினார்.

மனசாட்சி உறுத்தியதால் அம்மாவின் நினைவிடத்திற்கு வந்தேன். முதலமைச்சராக நான் பதவியேற்றபோது என்னை விஜயபாஸ்கர் வந்து பார்த்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரதமரை சந்தித்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறினேன். ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வருமாறு கேட்டேன். டெல்லியில் இருந்து கொண்டே இந்த அவசர சட்ட்டம் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கினேன். இது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை.

நான் முதல்வராக இருக்கும்போதே சசிகலா முதல்வராக வர வேண்டும் என்று தம்பிதுரை கூறினார். தம்பிதுரையால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.அதிமுகவின் நிலையைக் கண்டு தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அடுத்த செய்தி