ஆப்நகரம்

தமிழகத்தில் முகரம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கடைபிடிப்பு!

தமிழகத்தில் முகரம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதாக தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Sep 2018, 1:52 pm
தமிழகத்தில் முகரம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதாக தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
Samayam Tamil muh
தமிழகத்தில் முகரம் பண்டிகை வரும் 21ஆம் தேதி கடைபிடிப்பு!


இஸ்லாமிய மதத்துக்காக உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முகரம் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முகரம் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் தங்களது உடலை வறுத்தி ஊர்வலம் செல்வர்.

அந்தவகையில் தமிழ்நாட்டில் வரும் 21-ந் தேதி முகரம் பண்டிகை கடைபிடிக்கப்படுவதாக தலைமை காஜி முப்தி காஜி டாக்டர் சலாவூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முகரம் மாதத்திற்கான பிறை கடந்த 10ஆம் தேதி தென்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 21ஆம் தேதி முகரம் பண்டிகை தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி