ஆப்நகரம்

முதல்வருடன் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் திடீர் ஆலோசனை!

முதலமைச்சர் பழனிச்சாமி உடன் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 11 Sep 2017, 12:38 pm
சென்னை: முதலமைச்சர் பழனிச்சாமி உடன் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil tamilnadu cm discusses with dgp and chennai police commissioner
முதல்வருடன் காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர் திடீர் ஆலோசனை!


மருத்துவ கனவில் நீட் தேர்வால் ஏற்பட்ட விரக்தியால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் கொந்தளிப்பால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.

ஏராளமான அமைப்புகள் போராடி வந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிச்சாமி இல்லத்தில் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tamilnadu CM discusses with DGP and Chennai Police Commissioner.

அடுத்த செய்தி