ஆப்நகரம்

சாலையோர கடையில் டீ குடித்தவிட்டு மணி அடித்து சென்ற தமிழக முதல்வர்

புதுக்கோட்டை கீரனூர் நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர கடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டீ குடித்து விட்டுச் சென்றுள்ளார்.

TNN 10 Jun 2017, 8:23 am
புதுக்கோட்டை கீரனூர் நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர கடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டீ குடித்து விட்டுச் சென்றுள்ளார்.
Samayam Tamil tamilnadu cm drinking a tea in roadway tea stall
சாலையோர கடையில் டீ குடித்தவிட்டு மணி அடித்து சென்ற தமிழக முதல்வர்


புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்து பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வகுப்பு முடிந்து புதுக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் இருந்து மாணவிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர். முதல்வரை பார்த்த மாணவிகள் உற்சாகத்தில் கை அசைத்தனர். உடனே முதல்வரும் தன்னுடைய காரை நிறுத்தச்சொல்லி, மாணவிகளிடம் சென்று சிறிது நேரம் பேசியுள்ளார். மாணவிகளிடம் அவர் கூறியதாவது:

நீங்கள் மேல்நிலை பள்ளிக்கூட படிப்பை நன்றாக படிக்கவேண்டும். டாக்டராகி இந்த நாட்டுக்காக சேவை செய்யவேண்டும். மருத்துவ படிப்பிற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதன் பின்னர் கீரனூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது சாலையோரத்தில் இருந்த டீ கடைக்குச் சென்று தனக்கும், அதிகாரிகளுக்கும் டீ போடுமாறு கடைக்காரரிடம் கூறியுள்ளார். அப்போது டீ கடை நாற்காலியில் அமர்ந்துகொண்டு பொறுமையாக டீ குடித்தார்.

டீ கொடுத்ததற்கு பணமாக ரூ.1000 கொடுத்துள்ளார். அதற்கு கடைக்காரர் வாங்க மறுப்பு தெரிவிக்க விடாப்பிடியாக அதனை அவரிடம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டீ கடையில் மணி ஒன்று தொடங்கவிடப்பட்டுள்ளது. தன்னுடைய கடையில் டீ குடித்து விட்டு நன்றாக இருந்தால் அந்த மணியை அடித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் முதல்வரும் அந்த மணியை அடித்துவிட்டு டீ நன்றாக இருந்ததை சொல்லாமல் சொல்லிவிட்டு காரில் ஏறி விமானம் நிலையம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu cm edappadi palanisamy drinking a tea in roadway tea stall.

அடுத்த செய்தி